Friday, October 1, 2010

விடுமுறையிலோ பல விதம்

விடுமுறையிலோ பல விதம்
அதில் ஒரு விதம் வார வாரம்
ஒரு வித ஆரவாரம் சனி ஞாயிறில்
வாரத்தின் இறுதியில் வேலையில்
இருந்து கிடைக்கும் விடுதலை
முறை தவறாமல் வரும் விடுமுறை

வருஷ தொடக்கமாம் வருஷ பிறப்பில்
கிடைக்கும் விடுமுறை வேகமாய்
காலண்டரைதேடும் நம் கண்கள்
அடுத்த விடுமுறைகளை பட்டியலிட
கிடைத்தது இதற்கு அங்கு விடை

போகியில் தொடங்கி பொங்கலாய் வந்து
இன்பத்தை தந்து மாட்டு பொங்கலாய்
வரும் விடுமுறை கொண்டாத்தின்
உச்சக்கட்டம் தித்திக்கும் பொங்கலுடன் தானோ

இந்த விடுமுறை போதவில்லையோ நமக்கு
விநாயகர் சதுர்த்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்
ஆயுத பூஜையும் வந்தால் அதுவும் பலகார
படையலுடன் கிடைக்கும் விடுமுறையாம்

தேசத்தின் பெருமைக்காக நாம் இந்தியன்
என்று சொல்லும் விதத்தில் சுதந்திர தினமும்
குடியரசு தினமும் கொடுக்கும் கம்பீர விடுமறை

விடுதலைக்காக பாடு பட்ட பலரின்
பிறந்தநாளும் காந்தி ஜெயந்தியும்
புனிதாமான விடுமுறையாம்

பட பட பட்டாசுகளும்
புஷ் புஷ் புஷ்வானமும்
சர சர சரவேடியும் பல வண்ணமயமாய்
ஒளிமயமாய் இருக்கும் ஆக்ரோஷமான
இனிப்பு பலகாரங்களின் ஆரவாரத்துடன்
தீபாவளி விடுமுறை

இன்னும் திடீர் திடீர் என்று முளைக்கும்
போராட்ட விடுமுறை இயற்கை சீற்றம் விடுமுறை
கலவர விடுமுறை தீர்ப்பு விடுமுறை
அந்த விடுமுறை இந்த விடுமுறை

மொத்தத்தில் அனைவருக்கும் கொண்டாட்டம்
விடுமுறை என்றால் ரெக்கை கட்டி பறக்குது
மனசு அங்கும் இங்குமாய் ஐ ஐ ஜாலி என்று

வருஷம் முழுசா கொட்டிகிடக்கது விடுமுறை
அள்ளிக்கோ கிள்ளிகோ விடுமுறையை என்று
கூவத்தான் செய்யுது இந்த மனம்

அய்யோ அய்யோ என்ன சின்னபுள்ள தனமா இருக்கு
நமக்கு விடுமுறைய கண்டாமட்டும்
ஏன் இந்த குஷியோ தெரியல

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker