Sunday, September 5, 2010

வேணி என்ற கண்மணி

வேணி என்ற கண்மணி
என் மனதில் நின்ற பொன்மணி
கவியில் தேர்ந்த பெண்மணி

விண்ணிலே அழகு முழுமதி
மண்ணிலே என்றும் வெண்மதி
கவி சொல்லும் அழகிய திருமதி

கண் அழகியே கவி அழகியே
தங்கசொல் புவி அழகியே

அந்தாதியின் அந்தமே அதியே
சோலை அமைத்து இந்த
சுட்டி அணில் போலே
பல பூங்குயில்களும்
மயில்களும் வரவு தர
பூத்த வைர மலரே
சித்தமும் தமிழ் சந்தமாய்
நித்தமும் தமிழ் அடுக்காய்
பல வகையான படைப்பும்
தந்தாய் இன்னிசை தென்றலே

இதம் தரம் காண இசையை
தமிழில் இனபத்தை பொருத்தி
உன்னை அதற்காக வருத்தி
தந்தாய் சிரத்தை எடுத்து
அழகிய தமிழ் பாடல்களும்

உங்கள் எண்ணற்ற படைப்பும்
அதன் அனுபவபூர்வ அமைப்பும்
அளவில்லா பொக்கிஷமாய் வீற்று
விண்ணை தொட்டது சாதனையாய்

உங்களிடம் நான் கண்ட அன்பும்
உங்கள் அற்புத படைப்புகளில்
நான் கொண்ட காதலும்
நம் நங்கூர நட்பின் வளத்தை
உரமேற்றும் ரகசியம் ஆகுமாம்

சொல்ல வார்த்தைகள் இருந்தும்
திணறுகிறேன் சில சமயம்
அழகிய சிந்து பாட
இந்த சந்த நண்டு
விழிபிதுங்கி ஓட வரிகளுக்குள்
ஒரு தேன் தேடும் வண்டாய்

இந்த சுண்டு சுட்டி பொண்ணு
சித்ரா என்ன செய்ய உங்கள் நட்பின்
ஆழத்தையும் நீளத்தையும் விவரிக்க
என்றும் நட்பு தொடர வேண்டுகிறேன்
வரமாய் உங்களிடமும் இறைவனிடமும்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker