Monday, September 13, 2010

எனக்கு கிடைத்த சிகப்பு ரோஜாவே

எனக்கு கிடைத்த சிகப்பு ரோஜாவே
முள்ளால் நீ குத்தி காயப்படுத்தினாலும்
உன்னை நான் வெறுக்கமாட்டேன்

உன் இதழின் தேன் சாரம்
என் மனதின் ஓரம் சலனத்தை
ஏற்படுத்தும் காரம்

உன் இதழின் மணம்
என் மூச்சில் கலந்த வாசம்
என்றுமே அது என் சுவாசம்


நீ துவண்டு வாடினால்
என்னால் வாழ முடியாது
நானும் வாடுவேன் சருகாய்

உன் வாழ்க்கை முடிவு வரை
தொடர்வேன் ஒரு காவல்காரனாய்
கோபம் வேண்டாம் சிகப்பு அழகியே

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker