Sunday, September 26, 2010

காக்க காக்க -கேள்விகனைகளால் தாக்க

ஒரு வித தயக்கம் எனக்கு பசி மயக்கம்
வேலை கிடைக்குமோ என்ற கிறக்கம்
மனதிலே பூகம்பமாய் நில நடுக்கம்

என் பெயரை அங்கு கூவ
நானும் திணறி அடித்து ஓட
கேள்விகனைகளால் பெரிய அதிகாரி தாக்க
நானும் நாக்கு மூக்க நாக்கு மூக்க
என்று விடையால் தாக்க தக்க

அந்த வேல் முருகனோ என்னை காக்க காக்க
அதிகாரி என்னை சொன்னார் வெளியில் பொறுக்க
நானும் காக்க காக்க என்று படபடக்க

விரதம் இருந்தேன் மாலை வரைக்கும் பசிக்க
என்னை கூப்பிட நான் பொறுக்காமல் பறக்க
நினைத்த வேலையும் கிடைக்க கிடைக்க
நான் இன்பத்தில் என்னையே மறக்க மறக்க
ஆனந்தத்தில் அங்கும் இங்குமாய் குதிக்க குதிக்க

கடவுளுக்கு நன்றி சொல்லி சொல்லி
நான் வீட்டுக்கு ஓடினேன் துள்ளி துள்ளி
என் இன்பத்தை அனைவருக்கும் அள்ளி அள்ளி
இனிப்பாய் தந்தேன் இந்த கள்ளி கள்ளி

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker