Monday, April 25, 2011

காதல் கைதியாய்

என் கனவிலும் நினைவிலும்
உயிரிலும் கலந்தவர்

என்னை மயக்கியே ஆக்கினார்
ஒரு காதல் கைதியாய்

அவரின் இதய அரண்மனையில் நான்
இன்றும் விடுதலை ஆகவில்லை

இன்ப வலியில் நான் லயித்து கிடக்கிறேன்
மாண்புமிக்க அரசனாய் ஆளுகிறார் என்னை

அன்பின் உருவாய் அவர் என்னிலும்
பாச உருவாய் அவர் உள்ளில் நானுமாய்

நாட்களை நகர்த்தி வாழ்கையை
ரசிக்கிறோம் நாங்கள் இருவருமாய்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker