Thursday, August 9, 2012

இந்த கோகுலாஷ்டமியில் !!!

கோகுலத்தின் கண்ணா எந்தன் அழகு மணிவண்ணா !!

 உனக்காக வாசலிலே கோலமிட்டேன்
 மணம் கமலும் பூக்கள் தூவி காத்திருந்தேன்

 என் வாசல் தேடி நீ வருவாயா 
உன் வருகையை பரிசாய் எனக்கு தருவாயா

வாசலில் உன் பிஞ்சு பாத சுவடுகளிட்டு
 பல வித பலகாரங்கள் படைத்து!!

 உனது வருகையை எண்ணி பூத்திருக்கேன் நான் !!

 நீ வந்தால் நான் தருவேன் பால் மணம் மாறாத வெண்ணையும்,
 ரவா லட்டும், வெண்ணை உப்பு சீடையும்

 தித்திப்பான இனிப்பு சீடையும் அவல் பாயாசமும்

 வாடா என் நீலவண்ண அழகிய கண்ணா

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker