Tuesday, June 2, 2026

சாபம் வரமா இல்லை வரம் சாபமா

 சாபம் வரமா இல்லை வரம் சாபமா


தீரா மகிழ்ச்சி அதனால் ஏற்பட்ட நெகிழ்ச்சி

பல தீயசூழ்ச்சி இப்பொது அடைந்தது வீழ்ச்சி

அதன் பொருட்டு வந்தது ஒரு வித கிளர்ச்சி

அதுவே ஒரு நல் அழகிய மறுசுழற்சி

இது புது வித பாராட்டத்தக்க நல்முயற்சி

இது தூய தொண்டு ஆனால் மறுமலர்ச்சி

நாம் நல்வழியில் நல்லோர்க்கு இணங்கினால் நல் அகச்சி

அழியும் நம் முதுமை என்னும் முதிர்ச்சி

இதுக்கு தேவை அயராத நல்முயற்சி

நமக்கு தேவை தன்னலமற்ற பயிற்சி

தடுக்க வேண்டும் நம்மில் இருக்கும் தப்பான உணர்ச்சி

அப்போது தான் கிடைக்கும் வரம் என்னும் மலர்ச்சி

இதுவே நல் வளர்ச்சி நம் வாழ்க்கை பயண பாதையில்

இத்தனை கூறப்பட்ட ச்சிகள் வரிகளாய் சேரும் பொழுது

சாபம் கூட வரம் ஆகும் வரமாய் மாறும்

சாபம் வரமா இல்லை வரம் சாபமா


எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )


4 comments:

Anonymous said...

அன்பாக பழகினால் எல்லாம் நல்லது நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் எல்லோருடன் நன்றாக பேசினால் போதும் சாபம் வராமல் இருக்கும்

Anonymous said...

இவ்வளவு 'கேட்சியா' சொன்னதுக்கு வாழ்த்துகள்.

Jana said...

Nalla pathivu… 👍👍👍

Anonymous said...

நல்ல முயற்ச்சி வாழ்த்துகள்

Protected by Copyscape Online Plagiarism Checker