இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
பெண் என்பவள் மகளாய் பிறந்து
மலராய் மலர்ந்து மனைவியாய்
தாயாய் மாமியாராய் ஸ்தானம் எடுத்து
பல்துறையில் சிறந்து
அறிவில் மேலோங்கி
அழகில் அன்பில் காதலில்
அவளை மிஞ்ச யாரும் இல்லை
வீட்டையும் நாட்டையும் ஆளுகிறாள்
அலுவலகத்தை நிர்வகிப்பதிலும்
வீட்டை நிர்வகிப்பதிலும்
பொறுப்பாய் செயல்படுவதிலும்
குழந்தையை வளர்ப்பதிலும்
கல்வியை போதிப்பதிலும்
ஒழுக்கத்தை வளர்ப்பதிலும்
பணத்தை பொருளாதாரத்தை கையாளுவதிலும்
தந்தையாய் தாயாய் குருவாய் செயல்படுவதிலும்
கெட்டிக்காரி அவள்
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவள்
ஒரே நொடியில் பிரச்சனைகளை முடித்து வைப்பாள்
தீர்வுகள் சொல்வதில் பெண் சக்கரவர்த்தி அவள்
ஆணுக்குள் பெண்ணாய் பெண்ணுக்குள் ஆணாய்
இருந்து ஆள்பவள் வாழ்பவள்
செருக்கு கர்வம் அகந்தை இல்லாதவள்
ஆணவம் கொள்ளாதவள்
பாசத்தில் நேசத்தில் அன்பில் நற்பண்பில்
சிறந்தவள்
பல்கலையில் சிறந்த வாணி அவள்
தைரியத்தில் துர்கா தேவி அவள்
ஐஸ்வரியத்தில் லட்சுமி அவள்
பொறுமையில் பூமாதேவி அவள்
ஆளுமையில் ராணி அவள்
கற்பில் பத்தினி அவள்
சாந்த சொரூபிணி அவள்
பூ போன்ற மென்மை அவள்
புண்ணிய தேவி அவள்
தீமையை எதிர்க்கும் போராளி அவள்
நல்லோர்க்கு இனியவள்
தேவதை போன்றவள்
ஜகத்தின் பிரபஞ்சத்தின் மைய சக்தி அவள்
ஒவ்வொரு அணுவிலும் விருச்சம் அவள்
அனைவரின் ஒளியும் ஒளியும் அவள்
நதியும் அவள் மலையும் அவள்
கடலும் அவள் மழையும் அவள்
இதய துடிப்பும் அவள்
அன்பின் ஸ்பரிசம் அவள்
பண்பின் பனித்துளி அவள்
ஒழுக்கத்தின் மறுவடிவம் அவள்
நேர்மையில் சிறந்தவள்
உண்மையின் மறுவடிவம் அவள்
ஐம்புலன்களை அடக்கி ஆள்பவள்
ஐம்பூதங்களாய் வாழ்பவள்
மலர்களின் தேசம் அவள்
மென்மையின் மறுவடிவம் அவள்
பெண்மை என்னும் அணுத்துளி
பிரபஞ்சத்தை ஆளும் துளி அவள்
ஓவ்வொருவரும் பெண்ணாய் பிறக்க
என்ன தவம் செய்தோமோ இந்த பூமியில்
அனைவருக்கும் என்
இனிய மகளிர் தின வாழ்த்துகள்
எழுதியவர்
சித்ராஜானகிராமன்(சோனியா ஜரைக்கா )



