Thursday, February 26, 2026

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே





ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


ஜகத்தின் ராணியும் நானே

கல்கி ராணியும் நானே

யுகத்தின் ராணியும் நானே

அபய ராணியும் நானே

கலியுகத்தின் ராணியும் நானே

அனைத்து யுகத்தின் ராணியும் நானே

தேவி ராணியும் நானே

தேவ ராணியும் நானே

வேட்டைக்காரியும் நானே

நவீன காலத்தின் ராணியும் நானே

இயந்திர உலகத்தின் ராணியும் நானே

தந்திர ராணியும் நானே

மந்திர ராணியும் நானே

சொடக்கு ராணியும் நானே

வசூல் ராணியும் நானே

அழகு ராணியும் நானே

மொழி யாழிலினியும் நானே

லெட்சமி கடாக்க்ஷ அதிஷ்ட ராணியும் நானே

வீர துர்கேஸ்வரி ராணியும் நானே

அறிவு பெட்டக ராணியும் நானே

தெய்வ ராணியும் நானே

சமையல் ராணியும் நானே

அனைத்து உலகத்தின் ராணியும் நானே

அனைத்து லோகத்தின் ராணியும் நானே

சொர்க்க ராணியும் நானே

படைப்பு ராணியும் நானே

வைகுண்ட ராணியும் நானே

கைலாய ராணியும் நானே

காலத்தின் ராணியும் நானே

கர்மாவின் ராணியும் நானே

பிரபஞ்சத்தின் ராணியும் நானே

தர்மத்தின் ராணியும் நானே

நீதியின் ராணியும் நானே

உண்மையின் ராணியும் நானே

நேர்மையின் ராணியும் நானே

தேவதைகளின் ராணியும் நானே

திகிலூட்டும் ராணியும் நானே

சாந்த ராணியும் நானே

ஆட்டி வைப்பவளும் நானே

தீயவைகளை பூட்டி வைப்பவளும் நானே

அனைத்து நன்மையும் நானே

தீமையை வேர் அறுப்ளும் நானே

ஆள பிறந்தவளும் நானே

நன்றாய் வாழ பிறந்தவளும் நானே

மொத்தத்தில் அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

Friday, February 20, 2026

கிருஷ்ணாவின் புல்லாங்குழல் கானம்

 




 கிருஷ்ணா உன் புல்லாங்குழல் கானம்

கேட்கையில் உலகமே மெய் மறக்கிறது

தன்னையே மறக்கிறது

 

என் நெஞ்சமும் என் உடலும் மெய் சிலிர்க்கிறது

நான் ஏதோ ஒரு வினோத உலகத்தில்

பயணிப்பது போல் உணர்கிறேன்

 

எத்தனையோ பேர் புல்லாங்குழல் இசைக்கலாம்

ஆனால் உன் இசைக்கு மயங்காத

ரசிகர்கள் ரசிகைகள் உண்டா என்ன

 

சிறகு இல்லை பறக்கிறேன்

விண்ணை எட்டி தொடுகிறேன்

நிலவில் பயணிக்கிறேன்

சூரியனை கயிறால் கட்டி இழுக்கிறேன்

புயலை கையில் பிடித்து அடைத்து வைக்கிறேன்

நெருப்பில் தாவி தாவி விளையாடுகிறேன்

 

குயிலின் கானம் கேட்டுருக்கிறேன்

கிளிகளின் பேச்சை கேட்டுருக்கிறேன்

ஆனால் உன் புல்லாங்குழல் இசை

பசை போல என் நெஞ்சில் ஒட்டி கொண்டது

 

வேறு உலகத்துக்கு பயணப்பட வைக்கிறது

கற்பனையும் அல்ல நிஜ வாழ்க்கையும் அல்ல

இரண்டுக்கும் நடுவில் ஒரு புது கிரகத்தை கண்டேன்

 

அங்கே நான் வசிக்கவே ஆரம்பித்து விட்டேன்

அப்படி என்ன செய்தாய் கண்ணா இந்த பெண்ணை

 

இப்படிக்கு உன் ரசிகை

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )


Tuesday, February 10, 2026

அழகா அன்பா எது நிரந்தரம்



 


அழகா அன்பா எது நிரந்தரம்

 

அழகு என்பது நிரந்தரமற்ற

மேல்தோலின் பிரதிபலிப்பு

 

அன்பு என்பது உண்மையான

அக்கறையின் வெளிப்பாடு

 

அழகு வெளிப்பூச்சு போல

அன்பு உள்ளத்தின் பாச மொழி

 

அழகு அலங்கரிக்க அழகாய் மிளிரும்

ஆனால் நீரில் கரைந்து விடும்

சாயப்பூச்சு போல சாயம் வெளுத்துவிடும்

 

அன்பு பாசமாகவும் செல்ல கோபமாய்

இருவேறு ரூபம் கொண்டாலும்

நிரந்தரமாய் ஜொலிக்கும்

 

அழகு என்பது சிறுவயதில் தொடங்கி

இளமை பருவத்தில் பயணித்து

சிறிய காலமே நம்மிடம் நிலைத்து இருக்கும்

 

அன்பு என்பது சிறுவயதில் தொடங்கி

இளமையிலும் முதுமையிலும் தொடரும்

முடிவில்லாமல்

அன்பு முடிவற்றது எல்லையற்றதும் கூட

 

அழகுக்கு அன்பு ஒரு போதும் அடங்காது

அடங்கினாலும் அது நிரந்தரமற்றது

அழகின் சாயம் வெளுத்து போகும் தன்மை கொண்டது

 

ஆனால் அன்புக்கு அழகு என்னும் மகுடம் சூட்டப்படும்

அன்பு புறஅழகாய் அகஅழகாய் இருவேறு பரிமாணம் பெற்று

அரியணை ஏறும்

 

அழகுக்கும் அன்புக்கும் போட்டி வைத்தால்

அன்பு அந்த முதலிடத்தையும் தட்டி சென்றுவிடும்

 

ஆதலால் ஒருவரின் தோற்றம் எப்படி இருந்தாலும்

அவரின் அன்பு உண்மை என்றால் அழகு பெரிதாய்

தோன்றாது

 

அவர் அன்பால் அழகாய் தோன்றுவார்

அப்படி பட்டவர்களே அழகானவர்கள்

தூய அன்பை பரிமாறுவோர் அழகர்கள்

 

அழகின் வெளித்தோற்றம் எப்பொழுதுமே

அழியக்கூடிய அமைப்பு கொண்டது

 

அன்பில் அழகை காணுங்கள்

வெளிப்புற அழகில் அல்ல

 

By chitrajanakiraman(Soniyajaraika)

 

 


Sunday, February 8, 2026

காதலும் திருமணமும் முரண் அரண்

 





காதலும் திருமணமும் முரண் அரண்

 

காதலிக்கும் காலம் காத்திருக்கும் நீண்ட நிமிடங்கள் கூட

ஒரு நொடி போன்றது

 

திருமணத்திற்கு பின் காத்திருக்கும் நீண்ட நிமிடங்கள் கூட

ஒரு யுகம் போன்றது

 

காதலிக்கும் காலம் ஊடல் இனிக்கும்

மன்னிப்பு என்பது அருமருந்தாய் இருக்கும்

 

திருமணத்திற்கக்கு பின் ஊடல் ஒரு

இடைவிடா யுத்தம் போல நீளும் ஆறா வடுவாய் தோன்றும்

 

காதலிக்கும் காலம் அவள்/அவன் பிரகாசமான ஒளி உலகம்

 

திருமணத்திற்கு பின் அவள்/அவன் தான் இருண்ட

உலகமாய் தெரிவாள்

 

இதுவே காதல் திருமண முரண்

 

ஆனால் ஒருவருக்கு ஒருவர் புரிதல் கூடி ,

ஊடலில் கூடி மனம் விட்டு பேசி திளைத்து

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு

இருவரும் விட்டு கொடுத்து

அதுவும் போட்டி போட்டு மாற்றி மாற்றி

விட்டுக்கொடுத்து காதல் கனிரசம்

மாறி மாறி ஊட்டி அன்பை பரிமாறும்

காதல் திருமண முறையே ஒரு அரண்

 

பரபரப்பான இயந்திர வாழ்க்கையிலும்

இருவரும் தனக்கான நிமிடங்களை

மாறி மாறி பரிமாறினால்

முரணே அரனாய் மாறும்

 

காதல் பந்தம் திருமணத்தால் இணைந்தாலும்

அது இந்த முறையில் வாழத்தொடங்கினால்

நமது உயிரையும் வாழ்க்கையயும்

ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியோடு புதுப்பிக்க செய்யும்

காதல் திருமண பந்தம் நீண்டு நிலைத்திருக்கும்

 

By chitrajankiraman(soniyajaraika)

 

 

Thursday, January 22, 2026

நம்மால் புதிய உலகம் உதயம்

 











நம்மால் புதிய உலகம் உதயம்


என் மன்மதனே உன் ரதியடா நான்

என் காதல் ரெமோ உனக்கு ரம்பையடா நான்

நீ ராமன் என்றால் உனக்கு சீதையடா நான்

சிவன் என்றால் உன் சக்தியடா நான்

கண்ணன் என்றால் உன் ராதையடா நான்

உன்னை பின் தொடரும் நிழலும் நானே

உன் இதய துடிப்பும் நானே

உன் கனவும் நான்

உனக்குள் ஒளிந்து இருக்கும் நினைவும் நான்

உன்னில் நான் எண்ணில் நீ

நீ என்றால் நான்

நான் என்றால் நீ

உன்னில் பாதி நான்

என்னில் பாதி நீ

நாம் இரண்டற சங்கமிக்கும் போது

இரு உலகம் கலந்து

ஓர் புதிய உலகம் உருவெடுக்கும்

புதிய வடிவம் பெரும்

புது உயிர்கள் புத்துயிர் பெற்றெழும்

புதிய உலகம் உதயமாகட்டும் நம்மால்


By

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )



Protected by Copyscape Online Plagiarism Checker