புதிய உலகின் சாவி
சாவிகள் பல உள்ளது காலத்தின் கையில்
பல உலகம் பரவி உருவாகி உள்ளது
உலவும் உயிர்கள் பல இருக்கின்றது
ஆனால் மரணம் என்னும் முதல் அடியை முழுமையாய்
கடந்து பாவ சுமைகளை முழுமையாய் கழித்து
தன் பாவ கணக்கை குறைத்தவர்கே
ஒவ்வொரு உலகத்தில் பயணிக்க
பிரபஞ்சம் அனுமதி கொடுக்கும்
முறையான அனுமதி என்னும் அச்சாரம் பெறாமல் செய்யும்
அனைத்து அத்து மீறலும்பெரிய பாவமாகவே கருதப்பட்டு
நம் வாழ்க்கை என்னும் வங்கியில் வட்டியோடு வந்து சேரும்
ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு இருப்பது போல்
நாம் செய்யும் ஒவ்வொரு நன்மைக்கும் மதிப்பீடு உள்ளது
நல்லோரின் எண்ணங்கள் படி வாழ்ந்தால்
அவர்களுக்காக உதவ முனைந்தால்
நாம் புண்ணியம் என்னும் எண்ணிலடங்கா வட்டியை பெறுவோம்
நல்லோருக்கு எதிராய் எதிர்மறையாய் செயல்பட்டால்
மகாபாவம் என்னும் வட்டி அசுர வேகத்தில் பெருகிவிடும்
அதனால் நாம் பயணிக்கும் பாதையில் நன்மை
என்னும் விதையை விதைக்க வேண்டும்
அதற்கு நல்லோருக்கு அணில் போல
இயன்ற நன்மையை செய்தால்
காலம் நமக்கு மகா ஞானத்தை பலத்தை குடுக்கும்
நன்மை என்னும் முதல் அடியை வைக்க
தயக்கமில்லாமல் செயல்பட்டால்
புண்ணியம் என்னும் வட்டி விதையாய்
விதைக்கபடும் அது நாளை
பெரிய புண்ணிய மரமாய் வளர்ந்து
பற்பல நல்ற்பலனை தரும்
பின் ஒரு பெரிய பாதை ஜோதியுடன் தென்படும்
நமக்கு சாவியை கொடுத்து புது உலகுக்கு
அழைத்து செல்லும்
புண்ணியம் என்னும் முதலீடு செய்
நன்மையின் வழியில் செய்
பாவம் என்னும் இருள் அகன்று
பிரகாசம் என்னும் ஒளியை பெற்று
அருமையான பலனை பெற்று பல உலகில் பயணிப்பாய்
ஒருவரின் பலனை அவரின் வாழ்க்கை சந்தோஷத்தை
தடுத்து திருடி அனுபவித்தால் அவர்கள் செய்த பாவக்கணக்கு
பன்மடங்காய் பெருகி தண்டையாய் மாறி உன்னை தாக்கும்
அதனால் உன் வாழ்க்கையை நல்முறையில் வாழ்
இல்லையேல் தொண்டு செய் உதவி செய்
நன்மை என்னும் தீபம் ஏற்றி பாவம் என்னும்
இருளை அகற்று
புதிய உலகத்தின் சாவி உன் கையில் இன்றே
எழுதியவர்
சித்ரஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

.jpg)
No comments:
Post a Comment