Tuesday, September 7, 2010

சட சட மழையே குளு குளு மழையே

சட சட மழையே குளு குளு மழையே
பட பட வேகமாய் சுட சுட வந்தாய்
தட தட ஓட்டம் அங்கங்கு ஒதுங்குது கூட்டம்
என் கால்கள் மட்டும் தனியாய் உன்னை தேடும் நாட்டம்
சிடு சிடுவெனவே உந்தன் சத்தம் மண்ணை தொடும் பொழுது
விண்ணில் இருந்து விழுகுது உந்தன் விழுது
மண்ணில் வந்து தந்தாய் அழகிய அமுது
மழையில் நாணி சில நொடி நானும்
எனை மறந்து துள்ளி துள்ளி குதிக்க
சிறு பிள்ளையை போல மாறி போனேன்
சிறு சிறு சொட்டு என் மேல் பட்டு
பரவசம் அடைந்தேன் எனையும் மறந்தேன்
மழையில் அருவியாய் குளித்தேன்
அதனால் இன்புற்று களித்தேன்
என்னை பார்த்து பலரும் இன்று
மழையில் நனைய ஆசை கொண்டு
சடு குடு போட்டு முண்டி கொண்டு
மழையில் ஆட அழகாய் ஓட
நான் மழையை நாட வெகுண்டு ஓட
கொண்டாட்டம் முடிந்தது ஒரு மணி நேரத்திலே
மழையோ நின்றது திண்டாட்டமாய் தான்
மழையும் பஞ்சத்தில் அடிபட தஞ்சமாய்
மறைந்தது குளத்திலும் குட்டையிலும்
கடலிலும் அருவியுளும் அடுத்த படையலுக்கு

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker