Monday, April 25, 2011

உன் ரசிகையாய்

உன் நேசக்கரங்கள் என்னை தொடுகையில்
தாய்மையின் அருமை புரிகிறது

உந்தன் மழலை சிரிப்பில் என் மனது
விண்ணை தாண்டியும் பறக்கிறது

உன்னை மடியில் வைத்து
தாலாட்டுகையில் இனிக்கிறது என் வாழ்கை

உந்தன் கண்ணை சுருக்கி புருவத்தை தூக்கி
உயர்த்திபார்க்கிறாய் அனைவரையும் உன்னிப்பாய்

தூக்கத்திலும் சிரிக்கிறாய் இன்பத்தில் மிதக்கிறாய்
உன்னை நான் ரசிக்கிறேன் உன் ரசிகையாய்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker