Monday, April 25, 2011

இயற்க்கை அழகியே

உன் பார்வைபட்ட இடமெங்கும்
வண்ணத்து பூச்சிகளின் வரவு

உன் காலடிபட்ட இடத்தில்
மின்மினிகளின் ஆரவாரம்

உன் கைதொட்ட இடமெங்கும்
பூக்கள் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டமாகும்

உன் சிரிப்பு சத்தத்தில் சிட்டு குருவியும்
கருங்குயிலும் சிந்து படிக்கும் இனிமையாய்

உன்னால் இத்தனை அழகிய மாற்றம்
இந்த இயற்கையின் போக்கில்

நீ என்ன இயற்கையின் தேவதையா
இல்லை பூமியின் தேவலோக மங்கையா

இயற்க்கை அழகியே உந்தன் ஒவ்வொரு
அசைவும் ஓசையும் இயற்கையை

சிலிர்க்க வைக்கிறது ஆனந்தமாய்
மகிழ்ச்சியின் திகட்டும் திளைப்பில்

அனைத்து உயிர்களும் உந்தன் உறவில்
அழகிய உருவில் ஒரு பரிமாணமாய்

சந்தோஷ களிப்பில் அங்கும் இங்குமாய்
மேலும் கீழுமாய் குதிக்கிறது

சொர்க்கலோக மங்கையே நீ
உலகிற்கு கிடைத்த அழியா பரிசே

நீ வாழ வேண்டும் ஆயிரம் வருடம்
அழிவில்லாமல் இயற்கையின் சொத்தாய்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker