Monday, April 25, 2011

உன் திறமையை உணர்ந்துகொள்

உனக்குள் தான் நான் இருக்கிறேன்
உன்னோடு தான் நான் பிறந்தேன்

உன்னில் தான் வளர்கிறேன்
என்னை தெளிவாய் உணரந்துக்கொள்

உண்மையை அழகாய் புரிந்துக்கொள்
என்னை நீ ஒளிக்காதே மறக்காதே

வேண்டாம் என்று ஒதுக்காதே
நீ என்னை முழுமையாய் உணர்ந்து

அயராது முயன்றால் உனக்குள்
வளரும் விலைமதிப்பான பொக்கிஷம் நான்

என்னவென்று புரியவில்லையா
அதன் அருமையை நீ இன்னும் உணரவில்லையா

அது உன் திறமை என்னும் செடி
அதில் என்றுமே இல்லை வெறுமை

உனது திறமையை உரிய காலத்தில் பயிர் செய்
அதன் விளைச்சலை அபாரமாய் அள்ளு

உலகுக்கு தெரியும் நீ யார் என்று
உன் திறமையும் என்னவென்று

உன் திறமையை அனுதினமும் வளர்த்தால்
நீ விண்ணைதொடுவாய் சாதனை படைக்க

சோம்பேறி என்னும் அழுக்கை
சலவை செய்து சுறு சுறுப்பாய் கிளம்பு

நீ எந்த வகையிலும் குறைந்தவனில்லை
சாதிக்க பிறந்தவன் என்ற நம்பிக்கையில் கிளம்பு

தோல்வி என்னும் புழுவை உரமாக்கு
உன்சாதனையை பூத்துகுலுங்கும் மரமாக்கு

உன் திறமையை ஒரு புதுவித கௌரவமாக்கு
பின் வரும் உன் பெயரேழுத்தில் அடைமொழியாய்

அழகாய் காட்டு நீ யார் என்று உணர்த்து

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker