Tuesday, July 26, 2011

நினைவு ராகத்தில் தனிமையாய்

நில்லாது துடிக்கும் என் இதயம் அணு நொடியும்
உந்தன் பெயரை உச்சரிக்க

நான் திரும்பிய திசையெங்கும் உன்
பிம்ப அலைகள் தெரிய

உந்தன் வார்த்தைகளே அமுத கானமாய்
என்றும் எனக்கு ஒலிக்க

உன் ஸ்பரிச ரேகை என்னில் படர வேண்டி
நான் ஆழ்ந்து தவமிருக்க

மீட்டாத வீணையும் இன்று இசைக்கிறது
உந்தன் பெயரை நான் சொல்லுகையில்

நீ என்னை வந்து சேரும் காலம் வரை
இப்படியே என் பொழுது இனிமையாய்

உன் நினைவு ராகத்தில் தனிமையாய்
இசைத்து என்னை சந்தோஷ சாந்தியை
பரிசாய் தருகிறது

இந்த பிரிவு கொடியதாய் நீண்டாலும்
மாண்டு போகாது என் மூச்சு முத்து

பொக்கிஷமாய் காத்திருப்பேன்
ஒரு அழகிய சிப்பி முத்தாய்

உனது வருகை என்னை நோக்கி வரும்
என்று துவளாமல் நினைவு ராகம் பாடல் பாடி

நம்பிக்கையாய் இன்ப ராகம்
படித்து மனமகிழ்ந்து வரவேற்பேன்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker