Tuesday, February 10, 2026

அழகா அன்பா எது நிரந்தரம்



 


அழகா அன்பா எது நிரந்தரம்

 

அழகு என்பது நிரந்தரமற்ற

மேல்தோலின் பிரதிபலிப்பு

 

அன்பு என்பது உண்மையான

அக்கறையின் வெளிப்பாடு

 

அழகு வெளிப்பூச்சு போல

அன்பு உள்ளத்தின் பாச மொழி

 

அழகு அலங்கரிக்க அழகாய் மிளிரும்

ஆனால் நீரில் கரைந்து விடும்

சாயப்பூச்சு போல சாயம் வெளுத்துவிடும்

 

அன்பு பாசமாகவும் செல்ல கோபமாய்

இருவேறு ரூபம் கொண்டாலும்

நிரந்தரமாய் ஜொலிக்கும்

 

அழகு என்பது சிறுவயதில் தொடங்கி

இளமை பருவத்தில் பயணித்து

சிறிய காலமே நம்மிடம் நிலைத்து இருக்கும்

 

அன்பு என்பது சிறுவயதில் தொடங்கி

இளமையிலும் முதுமையிலும் தொடரும்

முடிவில்லாமல்

அன்பு முடிவற்றது எல்லையற்றதும் கூட

 

அழகுக்கு அன்பு ஒரு போதும் அடங்காது

அடங்கினாலும் அது நிரந்தரமற்றது

அழகின் சாயம் வெளுத்து போகும் தன்மை கொண்டது

 

ஆனால் அன்புக்கு அழகு என்னும் மகுடம் சூட்டப்படும்

அன்பு புறஅழகாய் அகஅழகாய் இருவேறு பரிமாணம் பெற்று

அரியணை ஏறும்

 

அழகுக்கும் அன்புக்கும் போட்டி வைத்தால்

அன்பு அந்த முதலிடத்தையும் தட்டி சென்றுவிடும்

 

ஆதலால் ஒருவரின் தோற்றம் எப்படி இருந்தாலும்

அவரின் அன்பு உண்மை என்றால் அழகு பெரிதாய்

தோன்றாது

 

அவர் அன்பால் அழகாய் தோன்றுவார்

அப்படி பட்டவர்களே அழகானவர்கள்

தூய அன்பை பரிமாறுவோர் அழகர்கள்

 

அழகின் வெளித்தோற்றம் எப்பொழுதுமே

அழியக்கூடிய அமைப்பு கொண்டது

 

அன்பில் அழகை காணுங்கள்

வெளிப்புற அழகில் அல்ல

 

By chitrajanakiraman(Soniyajaraika)

 

 


3 comments:

Anonymous said...

Arumaiyaana pathivu

Jaraika Zone said...

நன்றி 🙏

Jana said...

Alagana anbana vakiyangal… anbe enrum jeikum

Protected by Copyscape Online Plagiarism Checker