கேட்கையில்
உலகமே மெய் மறக்கிறது
தன்னையே
மறக்கிறது
என்
நெஞ்சமும் என் உடலும் மெய்
சிலிர்க்கிறது
நான்
ஏதோ ஒரு வினோத உலகத்தில்
பயணிப்பது
போல் உணர்கிறேன்
எத்தனையோ
பேர் புல்லாங்குழல் இசைக்கலாம்
ஆனால்
உன் இசைக்கு மயங்காத
ரசிகர்கள்
ரசிகைகள் உண்டா என்ன
சிறகு
இல்லை பறக்கிறேன்
விண்ணை
எட்டி தொடுகிறேன்
நிலவில்
பயணிக்கிறேன்
சூரியனை
கயிறால் கட்டி இழுக்கிறேன்
புயலை
கையில் பிடித்து அடைத்து வைக்கிறேன்
நெருப்பில்
தாவி தாவி விளையாடுகிறேன்
குயிலின்
கானம் கேட்டுருக்கிறேன்
கிளிகளின்
பேச்சை கேட்டுருக்கிறேன்
ஆனால்
உன் புல்லாங்குழல் இசை
பசை
போல என் நெஞ்சில் ஒட்டி
கொண்டது
வேறு
உலகத்துக்கு பயணப்பட வைக்கிறது
கற்பனையும்
அல்ல நிஜ வாழ்க்கையும் அல்ல
இரண்டுக்கும்
நடுவில் ஒரு புது கிரகத்தை
கண்டேன்
அங்கே
நான் வசிக்கவே ஆரம்பித்து விட்டேன்
அப்படி
என்ன செய்தாய் கண்ணா இந்த பெண்ணை
இப்படிக்கு
உன் ரசிகை
சித்ராஜானகிராமன்
(சோனியா ஜரைக்கா )

No comments:
Post a Comment