Monday, April 25, 2011

மழலையின் வரவு உலகிற்கு

பிறந்த பச்சிளம் குழந்தையை ஒரு தாய்
பார்த்து ரசிக்கையில் அவள் கவிதாயினியாகிறாள்

உந்தன் முதல் வரவு
இந்த மண்ணில் வருகையில்

என் வலியும் மறைந்து துன்பம்
அனைத்தும் அப்படியே துலைந்து

என்னில் உன்னால் ஆனந்தகண்ணீர் நிறைந்து
இன்பம் என்னும் ஊற்று பெருகி குவிந்து

உனக்கு உவந்து அமுதை பரிசளிப்பேன்
என் உதிரத்தை ஆரோக்கியமான தாய்ப்பாலாய்

என் கண்மணியே நீ வந்தாயடி மகாராணியாய்
என் வாழ்கையை முழுமை பெற செய்தாயடி

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker