Monday, April 25, 2011

உன்னை கண்ட நாள் முதலாய்

உன்னை கண்ட நாள் முதலாய்
என் இதயம் எங்கும் உன் நினைவுகள்

பழைய நினைவுகள் அனைத்தும் மறந்து
என் பல நினைவில் கொத்தாய் பதிந்து

கிடந்த நினைவலைகள் அனைத்தும் துறந்து
அது சற்று நேரத்தில் முற்றிலும் அடியோடு அழிந்து

உன்னை பற்றிய நினைவுக்குவியல்
என்னில் நிறைந்து என்னை கலைத்தது

கல்லையும் கரைத்தது உந்தன் ஆஜர்
என் மனது இன்று செய்யுது ஒரே பேஜார்

உன் வரவில் என் இதயம் சிலிர்க்கிறது
என் இதயத்தை முற்றிலும் உன் வாசமாக்கி

என்னை உன்னில் கலந்தாய் இனிமையாய்
உன் இதயத்தால் இப்படி ஒரு மாயவலையை விரித்து

உன் புன்னகை அம்பை எய்தி என்னை
உன் வசமாக்கினாய் ஒரு நொடியில்

என் நினைவில் வந்து என்னை வருடிவிட்டாய்
என்னை திருடிவிட்டாய் என் இதயத்திருடா

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker