காரியவாதி-இரண்டு வகையான விதை
தன் காரியமாய் மட்டும் செயல்படுவான் தன்னலவாதி
அவன் நன்மைக்கு உதவுவதை காட்டிலும்
தீமையை செய்து ஆதாயத்தை அனுபவிக்க
முயற்சிப்பான்
கண்ணியவாதி நன்மைக்கு மட்டுமே ஆதரவாய் இருப்பான்
தான் உண்டு தன் செயலுண்டு என்று இருப்பான்
தீமைக்கு எதிராய் செயல்படுவான் நன்மைக்கு
ஆதரவாய் திட்டம் தீட்டி தீமையை
வீழ்த்துத்துவான்
காரியம் என்னும் விதை நன்மைக்கும் தீமைக்கும் வாய்ப்பளிக்கும்
தீமையின் விதைகள் வேக வேகமாய் வளரும்
ஆனால் முதிர்வும் அசுத்தமுமாய்
துர்நாற்றமளிக்கும். இது பக்குவமற்ற நிலையை குறிக்கிறது.
அது முழுமை பெறாது என்றுமே
நன்மை என்னும் விதை மெதுவாய் வேறுன்றி பக்குவமாய் தெளிவாய் அழகாய்
நறுமணமாய் கமல வளர ஆரம்பித்து ஒரு கால கட்டம் நெருங்கியதும் தன்
வேகத்தை நீதானமாய் அதிகரிக்கும்
நாமும் நம் மனதில் நன்மை என்னும் விதையை இன்றே விதைப்போம் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல் நம் தனி முயற்சியில் தனி தனியாய்
எழுதியவர்
சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

%20-%20Copy.jpg)
%20-%20Copy.jpg)
1 comment:
Nalla pathivu… arumaiyana sorkal
Post a Comment