நம்மால் புதிய உலகம் உதயம்
என் மன்மதனே உன் ரதியடா நான்
என் காதல் ரெமோ உனக்கு ரம்பையடா நான்
நீ ராமன் என்றால் உனக்கு சீதையடா நான்
சிவன் என்றால் உன் சக்தியடா நான்
கண்ணன் என்றால் உன் ராதையடா நான்
உன்னை பின் தொடரும் நிழலும் நானே
உன் இதய துடிப்பும் நானே
உன் கனவும் நான்
உனக்குள் ஒளிந்து இருக்கும் நினைவும் நான்
உன்னில் நான் எண்ணில் நீ
நீ என்றால் நான்
நான் என்றால் நீ
உன்னில் பாதி நான்
என்னில் பாதி நீ
நாம் இரண்டற சங்கமிக்கும் போது
இரு உலகம் கலந்து
ஓர் புதிய உலகம் உருவெடுக்கும்
புதிய வடிவம் பெரும்
புது உயிர்கள் புத்துயிர் பெற்றெழும்
புதிய உலகம் உதயமாகட்டும் நம்மால்
By
சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )



4 comments:
Nice … arumayana vasanangal !
Nice
Thank you 🙂
thank you
Post a Comment